Tuesday, September 9, 2014

நண்பர்கள் கூடியிருந்த போது கணக்காசிரியரான ஒரு நண்பர் “ நான் ஒரு கணிதவித்தை செய்து காட்டுகிறேன், இதை எப்படி என்னால் செய்யமுடிகிறது என்பதை நீங்கள் விளக்க வேண்டும். யாராவது ஒருவர் இதை செய்யலாம். மூன்று இலக்க எண் ஒன்றை எழுதிக்கொள்ளுங்கள்; அந்த எண்ணை எனக்குச்சொல்ல வேண்டாம்.”
”அதில் பூஜ்யங்கள் இருக்கலாமா ?” எழுத ஆரம்பித்த நண்பர் கேட்டார். “நான் எந்த தடையும் விதிக்கவில்லை. நீங்கள் விரும்பும் எந்த மூன்று இலக்கங்களையும் எழுதிகொள்ளலாம்.”
” சரி, இதோ மூன்று இலக்க எண்ணை எழுதிக்கொண்டேன். இனி செய்யவேண்டியது என்ன ?”
“அதன் பக்கத்தில் அதே எண்ணை மீண்டும் எழுதுங்கள். இப்போது உங்களிடம் இருப்பது ஆறு இலக்க எண்ணாகிவிட்டது.”
“சரி”
காகித்தை உங்களுக்கு அடுத்த்தாக இருப்பவரிடம் கொடுங்கள். அவர் அந்த ஆறு இலக்க எண்ணை ஏழால் வகுக்கட்டும்.
“ சுலபமாய் சொல்லிவிடுகிறீர்கள், ஆனால் இந்த எண் ஏழால் மீதமின்றி வகுபடுமோ இல்லையோ ?”
”கவலைப்படாதீர்கள், நன்றாய் வகுபடும்.”
”இது என்ன எண் என்று உங்களுக்கு தெரியாது, அது எப்படி அவ்வளவு நிச்சமாக சொல்கிறீர்கள் ?”
“அதெல்லாம் பிற்பாடு பேசிகொள்ளலாம், வகுங்கள் நீங்கள்.”
“நீங்கள் சொல்வது சரிதான், மீதியில்லாமல் வகுபடுகிறதே ?”
”வகுத்து வந்த ஈவை எனக்கு தெரிவிக்க வேண்டாம். அந்த ஈவை மற்றொரு பேப்பரில் எழுதி அடுத்தவரிடம் கொடுங்கள். அவர் அந்த் ஈவை 11 ஆல் வகுக்கட்டும்.”
”இம்முறையும் நீங்கள் சொல்வது போல் வகுபடும் என்றா நினைக்கிறீர்கள் ?”
“ வகுத்துப்பாருங்கள் மீதி வராது.”
” நீங்கள் சொல்வது சரிதான், வகுபடுகிறது. மேற்கொண்டு செய்யவேண்டியது என்ன ?”
“வகுத்த வந்த ஈவை அடுத்தவரிடம் கொடுங்கள். அதை அவர் 13 ஆல் வகுக்கட்டும்”
” வகுப்பதற்கு நீங்கள் 13 ஐத் தேடிப்பிடித்திருக்க வேண்டாம், 13 ஆல் வகுபடும் எண்கள் மிக சொற்ப்பம்..நீங்கள் அதிர்ஷ்டசாலிதான், அந்த எண்களில் ஒன்றாய் அமைந்திருக்கிறது இது.”
“வகுத்து வந்த ஈவு எண்ணை என் கண்ணில் படாமல் காகிதத்தை மடித்து என்னிடம் கொடுங்கள்.”
காகிதத்தை பிரிக்காமல் அப்படியே அதை முதலில் எழுதிய நண்பரிடம் கொடுத்தார்.
”இதோ நீங்கள் எழுதிய எண் சரிதானே ?”
காகிதத்தை பிரித்துப்பார்த்த அந்த் நண்பர் வியப்புற்றுவிட்டார். ஆம், நான் எழுதிய எண் இதுவேதான்.
இதை நீங்களும் செய்து உங்கள் நண்பர்களை ஆச்சரியப்பட வைக்கலாம். கணக்கில் ஆர்வமுள்ளவராய் இருப்பின் இது எப்படி சாத்தியம் என்பதை ஆராயலாம்.
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

விடை:
21 சாக்லேட் என்று நீங்கள் கணக்கிட்டு இருந்தால்கூடத் தப்பு. மொத்தம் சாப்பிட்டது 22 சாக்லேட்டுகள். காசு கொடுத்து வாங்கியது 15 சாக்லேட்டுகள். அதன் 15 உறைகளையும் திருப்பிக் கொடுத்துப் பெற்றவை ஐந்து சாக்லேட்டுகள். அதில் மூன்று உறைகளையும் கொடுத்துப் பெற்றது ஒரு சாக்லேட். ஏற்கெனவே கையிலிருக்கும் இரண்டு சாக்லேட், இப்போது கையிலிருக்கும் ஒரு சாக்லேட்… இவற்றின் உறைகளைக் கொடுத்துப் பெற்றது ஒரு சாக்லேட். ஆக 15+5+1+1=22.

புதிர் அவிழும் கணங்கள்


இது டேப்லெட் பிசிகளின் (Tablet PCs) காலம். ஆனால் 6000 வருடங்களுக்கு முன்னரே டேப்லெட்டுகள் முளைத்துவிட்டன. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? ஆனால் ஒரு வித்தியாசம். இன்று போல அவைகளில் விண்டோஸ் இல்லை. மைக்ரோ சில்லுகள் கிடையாது. தொடுதிரை இல்லை. ஈரமான களிமண் நெருப்பில் சுடப்பட்டு எளிதாகச் செய்யப்பட்டன (Clay Tablets). சோப்புக் கட்டியில் ஊக்கியை வைத்து கீறி ‘ராமன்’ என்று பெயர்பதிப்பது போல கூரிய எழுத்தாணியால் எழுத உதவிய களிமண் பலகை. இதில் படங்களை கிளிக்-கி ஃபேஸ்புக்கில் விட முடியாது. ஆனால் சிறுசிறு படங்கள் வரையலாம். வரலாறு எழுதலாம். கணக்குப் புதிர்களைக் கீறி வைத்து பின்வரும் சந்திதிகளில் உள்ள மிகச்சிறந்த கணித மேதைகளை தூங்கவிடாமல் செய்யலாம்.

pythogaras
பிளிம்ப்டன் 322 (Plimpton 322 – 1800 BC) என்ற தற்போது அறியப்படும் களிமண் பலகை ஒன்று ஈராக் பாலைவனத்தில் கிடைத்தது. பண்டைய பாபிலோனியர் காலத்தைச் சேர்ந்தது. இது கணித வரலாற்றில் ஒரு விஷேமான பொருள். இதில் விநோதமான முறையில்

ஒரு எண்ணைஇரு எண்களின் மும்மடி ( Cube ) களின் கூட்டுத்தொகையாகஇரு வேறு விதமாக எழுதலாம். இவ்வாறு அமைந்த மிகச் சிறிய எண் எது ?  [ N =  A3  B3    C3 D3  ]
விடை : 1729 = 103 + 93 = 13 + 123

6 என்ற எண்ணின் எல்லா வகு (1,2,3,6) எண்களின் கூடுதல் ( 6 ஐத் தவிர்த்து ) (1 + 2 + 3 = ) 6 என்ற அதே எண். இவ்வாறு அமைந்த அடுத்த எண்ணைக் காண்க.

விடை : 28 è வகுத்திகள் 1,2,4,7,14,28 è 1+2+4+7+14 = 28

1 லிருந்து 10 வரை அனைத்து எண்களையும் பயன்படுத்தி மொத்த கூடுதல் 100 என வர வேண்டும் எனில் அத்தொடரைக் காண்க.

விடை: 10 + 9x7 + 8+6+5+4+3+2- 1 = 100

3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்த கூடுதல் 31 என்று வர வேண்டும். (+,-,x, ÷  எதை வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் )
விடை : 3+ 3 +(3/3) = 31


இருமடி மூலம் மற்றும் மும்மடி மூலம் காணும் மிகச் சிறிய எண் 64. ( 64 ன் வர்க்கமூலம் 864 ன் மும்மடி மூலம் 4 ) எனில் இவ்வாறு உள்ள அதற்கு அடுத்த எண் எது ?

விடை : 729 è 272 = 9= 729

ஒருவர் முட்டைகளை தட்டுகளில் அடுக்கிசைக்கிளில் வைத்து எடுத்து செல்லும் பொது எதிரே வேகமாக வந்த ஆட்டோ அவர் சைக்கிளை லேசாக மோதி தள்ளிவிட்டுச் சென்றது. இதனால் சைக்கிள் பின்னால் கட்டி வைக்கப்பட்டிருந்த முட்டைகள் சரிந்து விழுந்ததில் பல முட்டைகள் உடைந்து விட்டன. உடையாமல் எஞ்சிய முட்டைகளை எடுத்து எண்ணிப்பார்த்து உடைந்த முட்டைகள் எவ்வளவு என்று கணக்கிட்டுப்பார்த்தான்.

      உடைந்த முட்டைகளின் எண்ணிக்கையை 2,3,4,5,6 ஆல் வகுக்க 1மீதியும், 7 ஆல் வகுக்க மீதமின்றியும் இருக்கக்கூடிய ஒரு சிறிய எண்ணாக இருந்தது.  உடையாமல் எஞ்சிய முட்டைகளின் எண்ணிக்கையை 2 ஆல் வகுக்க 1 மீதியும்3 ஆல் வகுக்க 2 மீதியும்4 ஆல் வகுக்க 3 மீதியும்5 ஆல் வகுக்க 4 மீதியும்6 ஆல் வகுக்க 5 மீதியும் கிடைத்தன. ஆனால் இதுவும் 7 ஆல் மீதமின்றி வகுப்பட்டது எனில் உடைந்த முட்டைகள் எவ்வளவுஉடையாத முட்டைகள் எவ்வளவு?

விடை: உடைந்த முட்டையின் எண்ணிக்கையிலிருந்து 1 ஐக் கழிக்க கிடைக்கும் மீதிக்கு 2,3,4,5,6 ஆகியவை காரணிகளாக இருக்க வேண்டும்.  இவற்றைக் காரணிகளாக கொண்ட மிகச் சிறிய எண் 60. எனவே உடைந்த முட்டைகளின் எண்ணிக்கையிலிருந்து 1 ஐக் கழிக்கக் கிடைக்கும் மீதிக்கும் 60 ஒரு காரணியாக இருக்க வேண்டும்.
60x = உடைந்த முட்டைகள் – 1
உடைந்த முட்டைகளுக்கு 7 ஒரு காரணி è 7y = உடைந்த முட்டைகள் .
எனவே, 60x = 7y -1 è 7y = 60x+1
க்கு 1,2,3,4,5 என மதிப்புக் கொடுக்க கிடைப்பது 61,121,181,241,301 இதில் 301 மட்டுமே 7 ஆல் முழுமையாக வகுபடும். எனவே உடைந்த முட்டைகள் 301.

உடையாமல் எஞ்சிய முட்டைகளின் எண்ணிக்கைக்கு 7 ஒரு காரணி.
ஆறால் வகுக்க 5 மீதி என்பதால் அவ்வெண் 4 அல்லது 9ல் முடியும். 2ஆல் வகுக்க 1 மீதி என்பதால் அது ஒற்றை எண்ணாக இருக்க வேண்டும். எனவே 7 ஆல் வகுபடக் கூடிய 9 ல் முடியும் எண்கள் 49,199,189,259,329... இதில் 119 மட்டுமே பிற நிபந்தனைகளை நிறைவு செய்யும்.
119 = 59 x 2 + 1
    = 39 3+ 2
    = 29 4+ 3
    = 23 x 5 +  4
    = 19 x 6 +  5
    = 17 x 7 +  0

எனவே உடையாமல் எஞ்சிய முட்டைகள் 119 ஆகும். எனவே அவர் எடுத்துச்சென்ற மொத்த முட்டைகள் = 301 + 119  =  420

ஒரு காய்கறி கடைக்காரர் 40 கிலோ எடை கொண்ட காய்களை வைத்திருக்கிறார். அவர் வைத்துள்ள எடைக்கற்கள் நான்கு. அவரிடம் யார் வந்து எவ்வளவு எடை ( 40 கிலோ மற்றும் அதற்குள் )கேட்டாலும் எடைப்போட்டுத் தருகிறார். எடை அளவு பின்னங்களில் இல்லையெனில் கற்களின் எடை யாது ?

விடை: காய்கறி கடைக்காரரிடமிருந்த எடைக்கற்கள் 1,3,9,27 . அதைக்கொண்டு மற்றவர் கேட்கும் எடையை நிறுத்தித் தருகிறார்.


ஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ.1, 50 காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையைக் கொடுக்கக் கூடியன. பையில் எத்தனை எத்தனை காசுகள் இருந்தன பையிலிருந்த மொத்த பணம் எவ்வளவு ?   
விடை: இரு 50 காசுகள் சேர்ந்து ரூ.1
        நான்கு 25 காசுகள் சேர்ந்து ரூ.1
        ரூ.௧, 50 காசுகள், 25 காசுகள்  அனைத்தும் ஒரே மதிப்புள்ள தொகையைக் கொடுக்கிறது. எனவே பையில் உள்ள மொத்த காசுகளான 175 ஐ 1 + 2 + 4 = 7 ஆல் வகுக்க பையில் உள்ள மொத்த ரூ.1 காசுகள் எவ்வளவு என்று கிடைக்கும்.è 175/7 = 25
பையில் உள்ள ஒரு ரூபாய் காசுகள் 25
ரூ.1 காசுகள்        è  25  è ரூ.25
50 காசுகள் (2x x 25) è  50  è ரூ.25
25 காசுகள் (4 x 25  )   è 100  è ரூ.25
                   175 காசுகள் => ரூ.75

ஒருநாள் தன் கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டுக் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி நாள் ஒன்றுக்கு ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து செல்கிறாள். ஏழு நாட்களுக்குப் பிறகு கணவன் அவளைத் தொடர்ந்து,புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து சென்றான். அவ்விருவரும் எப்போது சந்திப்பார்கள் ?  இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?

விடை : வேகங்களின் வித்தியாசம்  =  1 ½ - 1 = ½
        7 ஐ வித்தியாசத்தால் வகுக்க = 7 / (1/2) = 14
         இருவரும் சந்திக்கும் நாள்     = 14 வது நாள்
         இருவரும் சென்ற தூரம்  = 1 ½ X  14  =  3/2 X 14  =  21காதங்கள்
                                   = 210 மைல்
1) கட்டியால் எட்டு கட்டி
    காலரை முக்கால் கட்டி
      செட்டியார் இறந்து போனார்
         சிறுபிள்ளை மூன்று பேர்
            கட்டியை உடைக்காமல்
                 கணக்காய் பிரித்திடுக...

விடை: ¾  கட்டிகள் மூன்று, ½ கட்டிகள் நான்கு, ¼ கட்டிகள் ஒன்று.
மூத்தவனுக்கு இரண்டு ¾ கட்டிகள்
இரண்டாமவனுக்கு ஒரு 3/4 , ஒரு ½ , ஒரு ¼ கட்டிகள்.
இளையவனுக்கு மூன்று ½ கட்டிகள்.

வட்டத்துள் சிக்குமா எண்கள் ? – கணித புதிர்



நண்பர்களே இங்குள்ள புகைப்படத்தில்  ஒன்பது சிறிய வட்டங்கள் உள்ளது இதில் நீங்கள் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை நிரப்பவேண்டும். ஒரு எண்ணினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் முடிவில்  மூன்று மூன்று வட்டங்கள் உள்ள நான்கு நேர் கோடுகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் முயற்சித்து பாருங்கள்.





.